5 2 1 scaled
உலகம்செய்திகள்

ஜப்பானில் இருந்து கடல் உணவுகளுக்கு மொத்தமாக தடை விதித்த நாடு

Share

ஜப்பானில் இருந்து கடல் உணவுகளுக்கு மொத்தமாக தடை விதித்த நாடு

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் பசிபிக் பெருங்கடலில் விடுவிக்க இருப்பதை அடுத்து சினா முக்கிய முடிவெடுத்துள்ளது.

ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வியாழக்கிழமை ஜப்பான் விடுவிக்க இருக்கிறது. விவாதத்துக்குரிய இந்த செயலை அடுத்து ஜப்பானில் இருந்து கடல் உணவுகளை தடை செய்ய சீனா முடிவெடுத்துள்ளது.

அத்துடன் ஜப்பானின் இந்த முடிவு சுற்றுவட்டார மீனவ சமூகங்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. வியாழக்கிழமை மிக குறைவான அளவு சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இந்த நடவடிக்கைக்கு பின்னர் கடல் நீதின் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் கதிரியக்க நீரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே சீனாவின் சுங்கத்துறை தெரிவிக்கையில், ஜப்பானில் இருந்து அனைத்து வகையான கடல் உனவு இறக்குமதியும் உடனடியாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. கதிரியக்க நீரை வெளியேற்றும் ஜப்பானின் இந்த முடிவு சுயநலம் மிக்கது மட்டுமின்றி பொறுப்பற்ற செயல் எனவும் சீனா கடுமையாக விமர்சித்திருந்தது.

மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் முழு உலகிற்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாம் நிலை பேரழிவு இது என்றும் சீனா எச்சரித்துள்ளது.

இதனிடையே, சியோலில் உள்ள ஜப்பானிய தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்திற்குள் கதிரியக்க நீரை வெளியேற்றுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் நுழைந்த குறைந்தது 14 பேரை தென்கொரிய பொலிசார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 24ம் திகதி தொடங்கி 17 நாட்களாக மொத்தம் 7,800 கன மீற்றர் கதிரியக்க நீரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். ஒரு நாளுக்கு 500,000 லிற்றர் மட்டுமே வெளியேற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

2011ல் அடுத்தடுத்து நடந்த மூன்று பேரழிவுகளுக்குப் பிறகு, ஐந்து ஜப்பானிய மாகாணங்களிலிருந்து கடல் உணவு மற்றும் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனா தடை விதித்தது.

அதன் பின்னர் ஜப்பானின் 47 மாகாணங்களில் 10 மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் அதன் தடையை விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...