3 5 scaled
உலகம்செய்திகள்

30,000 இந்திய மாணவர்களை வரவேற்கத் தயாராகும் பிரான்ஸ்

Share

30,000 இந்திய மாணவர்களை வரவேற்கத் தயாராகும் பிரான்ஸ்

பொதுவாக, மேற்படிப்புக்காக பிரான்ஸ் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் சில சமயங்களில் விசா தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால், இனி அப்படி இருக்காது என்று கூறியுள்ளார் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர்.

அதற்கான காரணம், 2030ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் தனது உயர்கல்வி நிறுவனங்களில் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்கத் தயாராக இருப்பதுதான் என்று கூறியுள்ளார், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் Thierry Mathou.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஐந்தாண்டு குறுகிய கால ஷெங்கன் விசா தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விவாதித்த Mathou, ஒரு இந்திய மாணவர் பிரான்சில் ஒரு செமஸ்டர் செலவழித்தால் கூட, அது வளர்க்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்பட வேண்டிய ஒரு தொடர்பை உருவாக்குகிறது என்று பிரான்ஸ் நம்புகிறது என்றார்.

இந்த கோடையில் இருந்து, முதுகலை பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள், பிரான்சில் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படித்தால் கூட, அவர்கள் 5 ஆண்டு குறுகிய கால ஷெங்கன் விசாவிற்கு தகுதி பெறுவார்கள்.

இது இந்திய முன்னாள் மாணவர்கள், பிரான்ஸ் மற்றும் அவர்களது பிரெஞ்சு சகாக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதற்காக அவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...