2 17 scaled
உலகம்செய்திகள்

சிறையிலிருந்து ஹெலிகொப்டரில் தப்பிய பிரான்ஸ் நாட்டவர்: கூடுதலாக 14 ஆண்டுகள் சிறை

Share

சிறையிலிருந்து ஹெலிகொப்டரில் தப்பிய பிரான்ஸ் நாட்டவர்: கூடுதலாக 14 ஆண்டுகள் சிறை

சினிமா பாணியில் சிறையிலிருந்து ஹெலிகொப்டரில் தப்பிய பிரான்ஸ் நாட்டுக் கொள்ளைக் கூட்டத்தலைவனான ஒருவருக்கு, நீதிமன்றம் ஒன்று மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2018ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 1ஆம் திகதி, பிரபல கொள்ளை கும்பல் தலைவனான Rédoine Faïd (46) என்னும் நபர் சிறையை உடைத்து ஹெலிகொப்டரில் தப்பிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொலிசார் ஒருவரை பலி வாங்கிய கொள்ளை முயற்சி சம்பவம் ஒன்றின் மூளையாக செயல்பட்டதற்காக 25 ஆண்டுகள் Rédoineக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பக்காவாக திட்டமிட்டு, சிறைக்குள்ளேயே ஹெலிகொப்டர் ஒன்றைக் கொண்டு இறக்கிய தனது உறவினர்கள் உதவியுடன் தப்பிச் சென்றார் அவர்.

அதைத் தொடர்ந்து, தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டு Rédoineஉடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்த பொலிசார், அவர் இதுவரை பர்தா அணிந்து பொலிசார் கண்களிலிருந்து தப்பி வந்ததைக் கண்டுபிடித்தனர்.

Rédoine தப்பியதிலிருந்தே சிறை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் உறுப்பினர்களின் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்துவந்த பொலிசாரின் கண்களில், Rédoine வளர்ந்த நகராகிய Creil நகரில் ஒரு இளம்பெண் சிக்கினாள்.

அவள் தனது காரில் பர்தா அணிந்த ஒரு நபரை ஏற்றினாள். அந்த நபரின் உருவமோ ஆணைப் போல் இருந்தது. பர்தா அணிந்த அந்த பெண் காரிலிருந்து இறங்கி ஃப்ளாட்டுக்குள் நுழைய, அவரை பின் தொடர்ந்து பர்தா அணிந்த இன்னொரு பெண்ணும் அதே ஃப்ளாட்டுக்குள் நுழைய, அது Rédoine மற்றும் அவரது சகோதரரான Rachidஆகத்தான் இருக்கும் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே, பிரான்ஸ் பொலிசார் ஏராளமானோர் அந்த ஃப்ளாட்டுக்குள் அதிரடியாக நுழைய, அங்கிருந்தது Rédoine மற்றும் Rachid என்பது தெரியவரவே, அவர்கள் இருவர் உட்பட அங்கிருந்த நான்கு பேரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் தான் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கேங்ஸ்டர் திரைப்படங்களைப் பார்த்து கொள்ளையடிக்கக் கற்றுக்கொண்டதாக Rédoine தெரிவித்தார்.

அவர் சொன்னது போலவே, பத்தே நிமிடங்களில் சிறையிலிருந்து ஹெலிகொப்டர் உதவியுடன் தப்பியிருந்தார். 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது போர் அடிக்கும் என்பதற்காகவே, தப்பிச் செல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்தார் Rédoine.

Rédoineக்கு ஏற்கனவே 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஹெலிகொப்டர் உதவியுடன் தப்பியதற்காக, தற்போது அவருக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...