1 14 scaled
உலகம்செய்திகள்

22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் : வெளிவரும் புதிய தகவல்

Share

22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் : வெளிவரும் புதிய தகவல்

அமெரிக்காவில் மைனே மாகாண மக்களை மொத்தமாக நடுக்கத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியுள்ளனர். சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ள துப்பாக்கிதாரியை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த Lewiston நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.

ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பந்துவீச்சு மையம், மற்றும் ஒரு மதுபான விடுதி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகும் மாகாணம் மொத்தம் பீதியில் உறைந்துள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 40 வயதான Robert Card என்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.

மேலும், அவர் ஒரு பயிற்சி பெற்ற துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் எனவும், அமெரிக்க இராணுவ ரிசர்வ் உறுப்பினர் எனவும், அவர் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கோடையில் அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...