பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்
உலகம்செய்திகள்

பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்

Share

பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்

பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் நெயில் எம்(Nael m) என்ற 17 வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பொலிஸார் தரப்பில் வழங்கிய விளக்கத்தில், போக்குவரத்து விதிகளை மீறியும், பொலிஸாரின் உத்தரவை மீறியும் காரை ஓட்டியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் நாடு முழுவதும் கலவரங்கள் 5வது நாள் இரவாக நடைபெறு வருகிறது.

மொத்தம் 45,000 பொலிஸார்கள் வரை கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் இதில் 2000 கலவரக்காரர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரால் சுடப்பட்டு உயிரிழந்த 17 வயது சிறுவன் நெயில் எம்(Nael m) உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

நாண்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மசூதியில் உடல் வைக்கப்பட்டு தொழுகைகள் நடத்தப்பட்ட பின்னர் அதே பகுதியில் உள்ள மலை உச்சியில் உள்ள கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக சிறுவனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...