23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

Share

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அதற்கு முன் கவனம் செலுத்தவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளது, மனித உரிமைகள் அமைப்பு ஒன்று.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau, வெளிநாட்டவர்கள் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பிரான்சின் மனித உரிமைகள் அமைப்பான Defenseur des Droits என்னும் அமைப்பு, பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது ஏற்கனவே கடினமான விடயம், அதற்கு முன் கவனம் செலுத்தவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என்று சாடியுள்ளது.

Defenseur des Droits அமைப்பின் தலைவரான Claire Hédon, ஒருவர் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அவர் அதற்கான பதிலைப் பெறுவதற்குள்ளேயே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அது ஏற்கனவே கடினமான விடயம் என்று கூறியுள்ளார்.

அதற்கு மாறாக, ஏற்கனவே முறைப்படி பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியிருப்பு அனுமதி அட்டைகளை புதுப்பிப்பதில் பிரச்சினைகள் உள்ளன.

ஆகவே, அந்த பிரச்சினையை முதலில் தீர்ப்பதில் கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார் Claire Hédon.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...