4 3 scaled
உலகம்செய்திகள்

கட்டாயத் திருமணம், துஸ்பிரயோகம்… சிக்கலில் மொராக்கோ பெண்கள்

Share

கட்டாயத் திருமணம், துஸ்பிரயோகம்… சிக்கலில் மொராக்கோ பெண்கள்

மொராக்கோவில் மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் கட்டாயத் திருமணம் மற்றும் துஸ்பிரயோகத்திற்கு பெண்கள் இரையாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மொராக்கோவில் செப்டம்பர் 8ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த நிலையில், ஆதரவற்ற இளம் பெண்களை காக்கும் பொருட்டு, கிராமப் பகுதிகளுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, சமூக ஊடகங்களில் ஆண்கள் பலர், ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ள தயார் எனவும் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளம் பெண்களை துஸ்பிரயோகம் செய்யும் நோக்கில் பயணப்படுவதாக குறிப்பிட்ட 20 வயது மாணவன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இப்படியான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மகளிர் அமைப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன. சிறார்கள் பலர் ஆபத்தான சூழலில் சிக்காமல் இருக்க, மொராக்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாதுகாப்பு அளிப்பதாக கூறி, வேறு நாடுகளுக்கு சிறார்களை கடத்தும் செயலும் முன்னெடுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்திற்கு பிறகு பாலியல் துஸ்பிரயோகத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.

ஆனால் மொராக்கோவை பொறுத்தமட்டில் அப்படியான சூழலில் சிக்கும் சிறார்கள் அல்லது பெண்களுக்கு ஆலோசனை அல்லது சேவையை வழங்கும் அமைப்புகள் ஏதும் மொராக்கோவில் இல்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...