5 3 scaled
உலகம்செய்திகள்

முதன்முறையாக தனியாக வெளிநாடு செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்

Share

முதன்முறையாக தனியாக வெளிநாடு செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்

முதன்முறையாக தன் கணவரான இளவரசர் வில்லியமை தனியாக வெளிநாடொன்றிற்கு அனுப்பிவைத்துள்ளார் அவரது மனைவியான இளவரசி கேட்.

முதன்முறையாக மனைவி கேட் இல்லாமல் தனியாக வெளிநாடு செல்கிறார் பிரித்தானிய இளவரசர் வில்லியம்.

Earthshot Prize என்னும் சுற்றுச்சூழலுக்கான விருதொன்றை உருவாக்கியவர் இளவரசர் வில்லியம். பின்னர், அது ஒரு தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு இந்த விருது வழங்கப்படும்.

தற்போது, அமெரிக்காவில் சுற்றுச்சூழல் தொடர்பிலான Earthshot Prize Innovation Summit என்னும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதற்காகத்தான் இளவரசர் வில்லியம் அமெரிக்கா சென்றுள்ளார்.

சாதாரண மனிதர்கள் இளவரசர்களை அன்னாந்து பார்த்து, நமக்கும் அவர்களைப்போல வாழ்வு கிடைக்காதா என ஏங்கும் நிலையில், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, இளவரசர் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் சாதாரண மனிதர்களைப்போல சாதாரணமாக வாழவேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆகவேதான் வில்லியம் அல்லது கேட், பிள்ளைகளை பள்ளியில் கொண்டு விடுகிறார்கள். இரவு உணவின்போது, நிச்சயம் தந்தை அல்லது தாய் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிடுவதை உறுதிசெய்கிறார்கள்.

ஆக, தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காகத்தான், கேட் தன் கணவர் வில்லியமுடன் அமெரிக்கா செல்லவில்லையாம்.

அத்துடன், நேற்று இளவரசி கேட் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவும் வேண்டியிருந்தது. சமீபத்தில் மன்னர் சார்லஸ் Commodore-in-Chief of the Fleet Air Arm என்னும் முக்கிய பொறுப்பை இளவரசி கேட்டுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...