DYKW4p5DdCj9kImZJHa7
இந்தியாஉலகம்செய்திகள்

சென்னையில் உணவுத் திருவிழா!

Share

சென்னையில் உணவுத் திருவிழா!

இலங்கையர்களும் பங்கேற்கும் கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவுத் திருவிழாவான சென்னை விழா, ஏப்ரல் 29 முதல் மே 14, வரை சென்னை நகரில் உள்ள தீவு மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 1.50 கோடி ரூபாய் செலவில் இந்த விழா நடத்தப்படுகிறது.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, கிர்கிஸ்தான், உகண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனிப்பட்ட கைவினைஞர்கள் தங்கள் சொந்த நாட்டு கைவினைப் பொருட்களை இந்த விழாவில் காட்சிப்படுத்துவார்கள்.

இந்த நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் 80க்கும் மேற்பட்ட விற்பனையகங்களை அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் சென்னையில் தமிழ்நாடு மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு ஒன்றையும் தமிழக சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...