அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
1952-72 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் தலைவரும் இலங்கை ராணியுமான எலிசபெத் இன்று காலமானதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மகாராணியின் மறைவு குறித்து பிரித்தானியாவின் அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய துக்க நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews

