6 28
உலகம்செய்திகள்

இந்தியாவில் பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் கைது

Share

இந்தியாவில் பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் கைது

இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக செல்ல முற்ப்ட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு வந்த 310 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியின் போது கையில் பயண பேக்குகளுடன் நின்று கொண்டிருந்த நான்கு இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நால்வரும், மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் (எ) ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ்( 68) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தயடுத்து கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கச்சிமடம் காவல்துறையினர் நால்வரையும் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு பேரையும் கைது செய்த தங்கச்சிமடம் காவல்துறையினர், இவர்களுக்கு படகு மூலம் அழைத்துச் செல்ல முயன்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...