rtjy 9 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்ற பசு

Share

இந்தியாவிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்றுள்ளது ஓங்கோல் பசு.

திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தீப ஆராதனையின் போது நாட்டு பசுக்களில் இருந்து பெறப்பட்ட பால், தயிர், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படும்.

இதற்கு 500 பசுக்கள் தேவைப்படும் நிலையில், 200 உயர் ரகத்தை சேர்ந்த நாட்டு பசுக்கள் உள்ளன.

மேலும் 300 பசுக்களை வழங்க பக்தர்களும் முன்வந்துள்ளனர், இந்நிலையில் பாலின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வாடகைத்தாய் மூலம் கலப்பினங்களாக உற்பத்தில் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதன்படி ஸ்ரீவெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைகழகத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

தொடர்ந்து வடமாநிலங்களில் உள்ள உயர் ரக பசுக்களின் கருமுட்டைகளை பல்கலைகழகம் சேகரிக்கத் தொடங்கியது.

அங்கு உயர் ரக காளைகளின் விந்தணுக்களுடன் இணைத்து கருத்தரிக்க செய்யப்பட்டன.

இந்த கரு ஓங்கோல் பசுவின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது, முறையாக கண்காணிக்கப்பட்ட ஓங்கோல் பசு, தற்போது கன்று ஈன்றுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்றுள்ளது ஓங்கோல் பசு.

இதற்கு பத்மாவதி என பெயரிட்டுள்ளனர், அடுத்த 5 ஆண்டுகளில் இதுபோன்று 300க்கும் மேற்பட்ட கன்றுகளை உருவாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...