கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோ நகரில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
இங்கு ஏற்பட்ட தீ, தீயணைப்பு வீரர்களின் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,.
கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஓட்சிசன் சிலிண்டர்கள் வெடித்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மருத்துவமனையின் பணியாளர்கள் எவரும் உள்ளடங்கவில்லை.
இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கருகிய நிலையில் காணப்படுகின்றமையால், சடலங்களை அடையாளம் காண தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Leave a comment