உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த பெண் உட்பட 4 பேருக்கு தூக்கு நிறைவேற்றம்: ஈரான் அதிரடி

Share

இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு வேளையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரான் அரசு நேற்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்புக்கு உளவு வேலை பார்த்த 4 பேரை ஈரான் அரசு தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அவர்களை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர்.

அவர்கள் மீது ஆள் கடத்தல், அச்சுறுத்தல், வாகனம் மற்றும் வீடுகளை எரித்தல் மொபைல் போன்களை திருடுதல் ஆகிய குற்றங்களை இஸ்ரேலுக்கு சார்பாக செய்து வந்ததாக குற்ற வழக்கு சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

இதையடுத்து ஈரான் நாட்டிற்கு எதிராக சதி திட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக உளவு வேலை பார்த்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரான் நேற்று மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வஃபா ஹனாரெ, அரம் ஒமார், ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி என்ற பெண்ணும் தூக்குத் தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...