maxresdefault scaled
உலகம்செய்திகள்

நிவாரண உதவி வழங்கும் போது மயங்கி விழுந்த நடிகர் டி.ராஜேந்தர்: அதிர்ச்சி சம்பவம்

Share

நிவாரண உதவி வழங்கும் பொழுது நடிகர் டி.ராஜேந்தர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தனர். வீடுகள், விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.

இன்று நெல்லை மாவட்டத்தில் நடிகர் விஜய் 1,500 பேருக்கு நிவாரண உதவி வழங்கினார். அதேபோல், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரும் இன்று தூத்துக்குடியில் நிவாரண உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது, திடீரென மயக்கம் அடைந்து சரிந்து விழுந்தார். இதனால், பதற்றமான அவரது ரசிகர்கள், டி.ஆரை அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து, அவரை பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...