25
உலகம்செய்திகள்

மின்தடையால் முடங்கிய பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் – என்ன காரணம்?

Share

மின்தடையால் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ், போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி, மதியம் 12:30 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, தற்போது வரை சீராகவில்லை என கூறப்படுகிறது.

இந்த மின்தடையால், அங்குள்ள சில விமான நிலையங்களில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஸ்பெயின் தலைநர் மாட்ரிட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சாலைகளில் உள்ள சிக்னல்கள் செயல் இழந்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருக்கும் ரயில்களில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் டவர்கள் செயல்படாததால், செல்போனிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாமலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மின் தடை காரணமாக மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பெல்ஜியத்திலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்தடைக்கான காரணம் தற்போது வரை தெரியாத நிலையில், மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளதாக, ஸ்பெயினுக்கு மின் விநியோக சேவை அளிக்கும் ரெட் எலக்ட்ரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்சின் தென்மேற்கில் உள்ள அலரிக் மலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பெர்பிக்னான் மற்றும் கிழக்கு நார்போன் இடையே உயர் மின்னழுத்த மின் இணைப்பு சேதமடைந்ததும் ஒரு சாத்தியமான காரணமாக அடையாளம் காணப்படுகிறது.

அதேவேளையில், இதன் பின்னணியில் ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

மின்தடைக்கான காரணம் தற்போது வரை உறுதியாக தெரியாத நிலையில், மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளதாக, ஸ்பெயினுக்கு மின் விநியோக சேவை அளிக்கும் ரெட் எலக்ட்ரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...