24 6644f5307e445
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: சுற்றிவளைத்த என்ஐஏ

Share

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: சுற்றிவளைத்த என்ஐஏ

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் சம்பந்தப்பட்ட உளவு வழக்கில் 2023ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட நிலையில், தலைமறைவான ஒருவரை, இந்திய தேசிய புலனாய்வு(NIA) அமைப்பு கைது செய்துள்ளது.

குறித்த கைதானது இன்று(15) இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மே 7ஆம் திகதி அவரை குற்றவாளியாக இந்நிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

முன்னதாக டிரொரஃபி நூருதீன் என்ற இவரை கைது செய்ய உதவுவோருக்கு 5 இலட்சம் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் இருந்து நூர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டதாக என்ஐஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கையின் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் பணிபுரிந்த இலங்கை நாட்டவரான முகமது சாகிர் ஹ_சைன் மற்றும் பாகிஸ்தானிய நாட்டவர் அமீர் சுபைர் சித்திக் ஆகியோருடன் இணைந்து சந்தேகநபர், பயங்கரவாத சதி செய்தார் என்பதே நூர்தீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

இவரை பயன்படுத்தி 2014ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரின் வழிகாட்டலில் போலியான இந்திய ரூபாய்கள் மூலம் தேச விரோத உளவு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில் நூருதீன் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...