kazakhstan
உலகம்செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: இராஜினாமா செய்தது அரசு (வீடியோ)

Share

எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்தமையின் எதிரொலியால் கஜகஸ்தான் அரசு இராஜினாமா செய்துள்ளது.

கடந்த இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன.

கலவரங்கள் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிதமையால் அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் கையெறி குண்டுகளையும் வீசினர்.

இந்நிலையில், இன்று Almaty மற்றும் Mangistau ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யபடுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும், 14 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் அரசின் இராஜினாமாவை ஏற்ற ஜனாதிபதி, துணைப் பிரதமரான, Alikhan Smailov என்பவரை நாட்டின் இடைக்கால பிரதமராக நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
ban2 1762774731
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை: மனநலன் காக்க ‘ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம்’ அமுல்!

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தவோ...

PTI11 10 2025 000418B
உலகம்செய்திகள்

புதுடெல்லி செங்கோட்டை அருகே சிற்றூந்து வெடிப்பு: தீவிரவாதத் தாக்குதலாகச் சந்தேகம் – 9 முதல் 13 பேர் பலி – நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (Red Fort) அருகே நேற்றிரவு இடம்பெற்ற சிற்றூந்து...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...