kazakhstan
உலகம்செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: இராஜினாமா செய்தது அரசு (வீடியோ)

Share

எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்தமையின் எதிரொலியால் கஜகஸ்தான் அரசு இராஜினாமா செய்துள்ளது.

கடந்த இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன.

கலவரங்கள் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிதமையால் அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் கையெறி குண்டுகளையும் வீசினர்.

இந்நிலையில், இன்று Almaty மற்றும் Mangistau ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யபடுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும், 14 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் அரசின் இராஜினாமாவை ஏற்ற ஜனாதிபதி, துணைப் பிரதமரான, Alikhan Smailov என்பவரை நாட்டின் இடைக்கால பிரதமராக நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...