tamilni 310 scaled
உலகம்செய்திகள்

பிறந்த குழந்தைகளை வெளியேற்றும் இஸ்ரேல்

Share

பிறந்த குழந்தைகளை வெளியேற்றும் இஸ்ரேல்

காசாவின் அல்-ஷிபா வைத்தியசாலையில் இருந்து குழந்தைகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியேற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தாக்குதல் உச்சகட்டத்தை தொட்டுள்ள நிலையில், காசா நகரை முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கொண்டு வந்துள்ளது.

ஹாமஸ் அமைப்பை தாக்கும் முயற்சியில் இஸ்ரேலிய படைகள் களமிறங்கி இருப்பதால், பாடசாலைகள் , வைத்தியசாலைகள், மசூதிகள் ஆகிய அனைத்திலும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது காசாவின் அல்-ஷிபா வைத்தியசாலையில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையை இஸ்ரேலிய இராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

அத்துடன் நோயாளிகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு படை உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக 2000 பேர் வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் குழந்தைகள் உட்பட தீவிர பாதிப்புகளுக்கு உள்ளான 291 நோயாளி கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அல்-ஷிபா வைத்தியசாலையில் சிக்கி தவித்த குழந்தைகளை ஐக்கிய நாடுகள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை இணைந்து வெளியேற்றியுள்ளது.

பிறந்த சில நாட்களே ஆன இந்த குழந்தைகள் சிகிச்சைக்காக எகிப்து நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...