செய்திகள்உலகம்

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய்!!

Digital
Digital
Share

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய் மாறியுள்ளது.

அதாவது உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக அந்நாட்டு பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் துபாயில் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.

அத்துடன் இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்ற டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டன.

இதனால் உலகின் முதல் டிஜிட்டல் அரசு என்ற பெருமையை துபாய் தன் வசமாக்கியுள்ளது.

இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தெரிவிக்கையில்,

இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் தமது வெற்றி பயணம் எனவும் ,

இது துபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவும்,அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் இது ஒரு முன்மாதிரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

இத்திட்டத்தின் மூலம், 2650 கோடி இந்திய ரூபாய்கள் அதாவது 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தமது அரசாங்கத்திற்கு சேமிக்க படுகின்றதெனவும், 14 மில்லியனுக்கும் அதிகமான மனித வேலை நேரமும் குறைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...