FB IMG 1681704167366
இலங்கைஉலகம்செய்திகள்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

Share

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலைகள் மற்றும் தமிழ் எழுத்தில் தேவாரம் எழுதப்பட்ட செப்பு தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் கோவில்.இங்கு தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மயிலாடுதுறை சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது.

அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100 க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.தமிழகத்தின் சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலைகள் மற்றும் தமிழ் எழுத்தில் தேவாரம் எழுதப்பட்ட செப்பு தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...