9 44
உலகம்செய்திகள்

கோவிட் குறித்த தரவுகளை சீனாவிடம் மீண்டும் கோரும் உலக அமைப்பு

Share

கோவிட் குறித்த தரவுகளை சீனாவிடம் மீண்டும் கோரும் உலக அமைப்பு

சீனாவின் வுஹான் நகரில் கோவிட் தொற்றுநோய் பரவ ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் அதன் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது ஒரு தார்மீக மற்றும் அறிவியல் கட்டாயமாகும் என்று உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடுகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மை, பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்கால தொற்றுநோய்களுக்கு உலகத்தால் போதுமான தயார் நிலையை உருவாக்க முடியாது என்றும் உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.

பல விஞ்ஞானிகள் கோவிட் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இயற்கையாகவே பரவியதாக நினைக்கிறார்கள்.

ஆனால் அது வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டதாக சில சந்தேகங்கள் தொடர்கின்றன.

இதற்கிடையில் உலக சுகாதார மையத்தின் புதிய கோரிக்கைக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.

தகவல்களின்படி சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் தொற்று பரவிய செய்தி 2019 டிசம்பர் 31ஆம் திகதி வெளியானது.

2020 விடியற்காலையில் உலக சுகாதார மையத்தின் பணியாளர்கள் தமது அவசர நிலையை ஆரம்பித்தனர்.

அடுத்த வந்த மூன்று நாட்களில் உலக சுகாதார மையம், தமது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

2020 ஜனவரி 9-12 திகதிகளுக்குள், அந்த அமைப்பு, நாடுகளுக்கான அதன் முதல் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது,

இந்தநிலையில், பாரிய அழிவுகளை அடுத்து 2023 இல் கோவிட்டில் இருந்து உலகம் விடுபட்ட செய்தியை உலக சுகாதார மையம் வெளியிட்டது.

இதேவேளை உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸின் தகவல்படி, கோவிட்டினால் குறைந்தது ஏழு மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.

எனினும் உண்மையான எண்ணிக்கை 20 மில்லியன் என்றும் அதிகார பூர்வ மதிப்பீட்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் அடுத்த தொற்றுநோய் எந்த நேரத்திலும் வரலாம் என்றும் அதற்கு உலகம் தயாராக இருக்கவேண்டும் என்றும் கெப்ரேயஸ் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....