உலகம்செய்திகள்

ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும் நாடுகள்

Share
13 8
Share

ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும் நாடுகள்

ஜேர்மன் இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன் (German) குடியுரிமையை பெற தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டைக் குடியுரிமை பெறுவதன் மூலம் வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தாலும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையையும் வைத்திருக்கலாம்.

இவ்வாறான ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் சில நாட்டு மக்கள் ஜேர்மன் குடியுரிமையை பெறுவதற்கு முன்வர தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் குறிப்பாக, ஆஸ்திரியா (Austria) மற்றும் இந்தியா (India) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜேர்மன் குடியுரிமை பெறத் தயங்குகிறார்கள்.

இந்நிலையில், இந்திய மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெறுவதற்கு இந்தியாவில் அனுமதியின்மையும் இதற்கு காரணமாகும்.

மேலும், வெளிநாடொன்றில் குடியுரிமைளை பெறும் இந்தியர்கள், தங்கள் இந்திய கடவுச்சீட்டை அந்த நாட்டிலேயே உள்ள இந்திய தூதரகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்பது இந்திய விதிமுறையாகும்.

இதனடிப்படையில், ஜேர்மன் குடியுரிமையை பெற இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

எனவே, ஜேர்மன் குடியுரிமை விதிகள் மாற்றப்பட்டாலும், இந்தியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவற்றை பெற முன்வர போவதில்லை என்பது தெரியவருகின்றது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...