2 18
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு

Share

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு

இலங்கையில், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அல்லது நடுப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு (e – passport) அறிமுகப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

கடவுசீட்டுக்காக தற்போது செலுத்தப்படும் தொகையை செலுத்தி குறித்த இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் ஒக்டோபர் மாதம் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ளுவது சிறந்தது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறு இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், புதிய வசதிகள் மற்றும் ‘Chip’ உடன் கூடிய கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...