rtjy 149 scaled
உலகம்செய்திகள்

உலகளவில் அதிகளவு போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியல்

Share

உலகளவில் அதிகளவு போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியல்

உலகளவில் அதிகபடியான போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் முக்கியமான 5 நாடுகள் இந்த தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இவை உலகத்தில் நடைபெறக்கூடிய பெரும்பாலான போர்களை தீர்மானிக்கக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்தவகையில் சீனா 5 ஆம் இடத்தில் உள்ளதுடன், சீனாவின் போர் தளபாடங்கள் பெருமளவிலானவை அமெரிக்க போர் தளபாடங்களை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 4 ஆம் இடத்தில் ஜெர்மனியும், மூன்றாம் இடத்தை பிரான்ஸ் நாடும் கைப்பற்றியுள்ளது.

ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸின் பங்களிப்பு 8.2 சதவீதம் ஆகும். மேலும் அந்நாடு, போர்க்கப்பல் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ரஷ்யா உள்ளதுடன், ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 20 சதவீதம் ஆகும்.

உலகம் முழுவதும் சுமார் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரஷ்யா ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.

இந்த தரவரிசையில் அமெரிக்கா முதலாம் இடத்தை பிடித்துள்ளது.ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 37 சதவீதம் ஆகும். உலகம் முழுவதும் சுமார் 96 நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....