இந்தியாவில் நேற்று (29) 23 ஆயிரத்து 139 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இவர்களில் 3 கோடியே 30 இலட்சத்து 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 2 இலட்சத்து 82 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 309 பேர் உயிரிழந்துள்ளனர் . இந் நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
Leave a comment