இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொவிட் தொற்றினால் ஒரே நாளில் 290 பேர் பலியாகியுள்ளனர் .
இதற்கமைய உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 இலட்சத்து 76 ஆயிரத்து 319 ஆக காணப்படுகின்றது.
இந்தியா முழுவதிலும் தற்போது 3 இலட்சத்து 1,442 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Leave a comment