1 scaled
உலகம்செய்திகள்

தொடர் கனமழை மற்றும் மின்னல்: 8 பேர் பரிதாபமாக மரணம்

Share

இந்திய மாநிலம் ஜார்கண்டில் பெய்துவரும் கனமழை மற்றும் மின்னல் தாக்குவதாலும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் சிறிய பாலங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்க வேண்டாம் எனவும், மரங்களின் அடியில் நிற்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் வசிப்போர் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ராஞ்சியின் லால்பூர் பகுதியில் நிரம்பி வழிந்த சாக்கடையில் விழுந்து பிரசாத் (எ) சோட்டு என்பவர் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரின் உடலானது இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டது.

மேலும், பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கடந்த 24 மணிநேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...