25 68453fa6a06df
உலகம்செய்திகள்

கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

Share

கொலம்பிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பழமைவாத கொலம்பிய செனட் உறுப்பினர்-மிகுவல் யூரிப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை மேலோங்கிய நிலையில், போகோட்டா நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தபோதே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் ஊடக தகவல்களின்படி, அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள், தலையில் கடும் காயங்களுடன், 39 வயதான ஜனாதிபதி வேட்பாளர்; இரத்தம் தோய்ந்த நிலையில் இருப்பதை காட்டுகின்றன எனினும், செனட்டரின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

செனட்டரின் எதிர்க்கட்சியான ஜனநாயக மையம், யூரிப் டர்பே மீதான தாக்குதலை கடுமையானது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைச் செயல் என்றும் விபரித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, “செனட்டர் மிகுவல் யூரிப் மீதான படுகொலை முயற்சியை கடுமையாக கண்டித்துள்ளார்

இது ஜனநாயகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொலம்பிய அரசாங்கத்தின்; வன்முறை கலாசாரத்தையும் விமர்சித்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...