உலகம்செய்திகள்

பனிப்போர் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள புடின்

Share
24 66917d07ac487
Share

பனிப்போர் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள புடின்

நீண்ட தூர ஏவுகணைகளை ஜேர்மனியில்(Germany) நிறுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு பனிப்போருக்கு வழிவகை செய்யக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின்போது நீண்ட தூர ஏவுகணைகளை ஜேர்மனியில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸும்(Olaf Scholz) இந்த முடிவை வரவேற்றுள்ளார். ஆனால், அமெரிக்காவின் அறிவிப்பு ரஷ்ய ஜனாதிபதி புடினை கோபப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாம் பனிப்போரை நோக்கி உறுதியான அடி எடுத்து வைக்கிறோம் என்று கூறியுள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர், நேரடி மோதலுக்குரிய வகையிலான பனிப்போரின் அனைத்து விடயங்களும் மீண்டும் திரும்புகின்றன என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த முடிவு, ஜனாதிபதி ஷோல்ஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஜேர்மனியில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...