3 30 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஜேர்மன் அரசியல்வாதி திடீர் மயக்கம்: எழுந்த சந்தேகம்

Share

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஜேர்மன் அரசியல்வாதி திடீர் மயக்கம்: எழுந்த சந்தேகம்

ஜேர்மனியில் வலதுசாரிக் கட்சியினர் புலம்பெயர்தலுக்கெதிரான கருத்துக்களால் தொடர்ந்து அச்சுறுத்தலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், கூட்டம் ஒன்றில் பங்கேற்ற வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) என்னும் கட்சியின் இணைத்தலைவரான Tino Chrupalla (48) என்பவரே மயங்கி விழுந்தவர் ஆவார்.

நேற்று, பவேரியா மாகாணத்தில் பிரச்சாரம் செய்துவந்த Tinoவுடன் சிலர் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, Tino திடீரென நிலைகுலைந்து விழ, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tino தாக்கப்பட்டாரா, அல்லது கீழே விழுந்துவிட்டாரா அல்லது உண்மையாகவே உடல் நலமில்லாமல் இருந்தாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ள பவேரிய பொலிஸ் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட AfD கட்சியை, நான்கு ஆண்டுகளாக Tino தலைமையேற்று நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...