3 30 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஜேர்மன் அரசியல்வாதி திடீர் மயக்கம்: எழுந்த சந்தேகம்

Share

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஜேர்மன் அரசியல்வாதி திடீர் மயக்கம்: எழுந்த சந்தேகம்

ஜேர்மனியில் வலதுசாரிக் கட்சியினர் புலம்பெயர்தலுக்கெதிரான கருத்துக்களால் தொடர்ந்து அச்சுறுத்தலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், கூட்டம் ஒன்றில் பங்கேற்ற வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) என்னும் கட்சியின் இணைத்தலைவரான Tino Chrupalla (48) என்பவரே மயங்கி விழுந்தவர் ஆவார்.

நேற்று, பவேரியா மாகாணத்தில் பிரச்சாரம் செய்துவந்த Tinoவுடன் சிலர் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, Tino திடீரென நிலைகுலைந்து விழ, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tino தாக்கப்பட்டாரா, அல்லது கீழே விழுந்துவிட்டாரா அல்லது உண்மையாகவே உடல் நலமில்லாமல் இருந்தாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ள பவேரிய பொலிஸ் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட AfD கட்சியை, நான்கு ஆண்டுகளாக Tino தலைமையேற்று நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...