3 30 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஜேர்மன் அரசியல்வாதி திடீர் மயக்கம்: எழுந்த சந்தேகம்

Share

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஜேர்மன் அரசியல்வாதி திடீர் மயக்கம்: எழுந்த சந்தேகம்

ஜேர்மனியில் வலதுசாரிக் கட்சியினர் புலம்பெயர்தலுக்கெதிரான கருத்துக்களால் தொடர்ந்து அச்சுறுத்தலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், கூட்டம் ஒன்றில் பங்கேற்ற வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) என்னும் கட்சியின் இணைத்தலைவரான Tino Chrupalla (48) என்பவரே மயங்கி விழுந்தவர் ஆவார்.

நேற்று, பவேரியா மாகாணத்தில் பிரச்சாரம் செய்துவந்த Tinoவுடன் சிலர் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, Tino திடீரென நிலைகுலைந்து விழ, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tino தாக்கப்பட்டாரா, அல்லது கீழே விழுந்துவிட்டாரா அல்லது உண்மையாகவே உடல் நலமில்லாமல் இருந்தாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ள பவேரிய பொலிஸ் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட AfD கட்சியை, நான்கு ஆண்டுகளாக Tino தலைமையேற்று நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

17 15
செய்திகள்இந்தியா

ரஜினிகாந்தை இழிவுபடுத்திய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்:நாகேந்திரன்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து...

16 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட மாகாண வீதி அபிவிருத்திக்கு முக்கிய முன்னுரிமை: முழுமையாகப் புனரமைக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைத்து, போக்குவரத்து...

15 15
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – மனோ கணேசன் இடையிலான தொலைபேசி உரையாடல்: சந்திப்பிற்கு இணக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று...