tamilni 452 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவில் வியக்க வைக்கும் கிறிஸ்மஸ் தாத்தா மணற்சிற்பம்

Share

இந்தியாவில் வியக்க வைக்கும் கிறிஸ்மஸ் தாத்தா மணற்சிற்பம்

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இந்தியாவின் – ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்மஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மணற் சிற்பம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் முக்கிய நிகழ்வுகளின் போது ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதற்கமைய நேற்று (25.12.2023) கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூரி கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

குறித்த மணற்சிற்பம் 100 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.

மேலும், இந்த சிற்பத்தின் மூலம் ‘மரக்கன்றை பரிசளிப்பீர்; பூமியை பசுமையாக்குவீர்’ என்ற செய்தியை உலகிற்கு உணர்த்துவதாக சுதர்சன் பட்நாயக் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...