tamilni 453 scaled
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைகளின் மோசமான சுகாதார வசதிகள்

Share

சிறைச்சாலைகளின் மோசமான சுகாதார வசதிகள்

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (23.12.2023) மேலும் 8 கைதிகளுக்கு மூளைக்காய்ச்சால் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளால் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 8 கைதிகள் அதே நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாலேயே இந்நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.

இதனால் ஏதேனும் நோய்த்தொற்றுப்பரவல் ஏற்படும்போது சிறைக்கைதிகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாகின்றனர்.

மேலும் சிறைச்சாலைகளில் சாதாரணமாக தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கைக்கு அப்பால் கைதுகள், தடுத்து வைப்புக்கள் இடம்பெறும் போது இடநெருக்கடி ஏற்படுகின்றது.இதனால் நோய்த்தொற்றுக்கள் அதிகரிக்கின்றன.

அத்தோடு கோவிட் 19 காலப்பகுதியில் கூட கைதிகளினுடைய சுகாதார நலன்கள் பேணப்படாமை, அதன்போது சிறைச்சாலைகளில் நிலவிய குறைபாடுகள் பற்றியும் அம்பிகா சற்குணநாதன் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...