23 6545fa12db849
உலகம்செய்திகள்

ஆபத்தான முறையில் பறந்த சீனப் போர் விமானம்; கனடா சீற்றம்

Share

ஆபத்தான முறையில் பறந்த சீனப் போர் விமானம்; கனடா சீற்றம்

கனேடிய இராணுவ ஹெலிகாப்டருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக சீனப் போர் விமானம் பறந்தது கனடாவின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

கனடாவின் HMCS Ottawa இராணுவத்திற்கு சொந்தமான CH-148 Cyclone ஹெலிகாப்டருக்கு முன்னால் சீனாவின் J-11s போர் விமானம் ஆபத்தான முறையில் பறந்தது ஆத்திரமூட்டலைத் தூண்டியதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு துறை (Department of National Defence) தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சீனக் கடலில் Paracel தீவுக்கு அருகில் சர்வதேச எல்லையில் பயணித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டர் மீது சீன விமானம் சுட்டதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் (Bill Blair) தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை அதே ஹெலிகாப்டரை சீன போர் விமானம் தக்க முயன்றதாக கூறப்படுகிறது

மேலும், இந்த சம்பவம் குறித்து தனது கவலையை சீனாவிடம் தெரிவிப்பதாகவும் பிளேயர் கூறினார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு சம்பவம் இது என்றும் அவர் கூறினார்.

சீன விமானப்படையின் ஆபத்தான இந்த நடத்தை இரண்டாவது முறையாக நடந்துள்ளது. கடந்த மாதம், ஒரு சீன ஜெட் விமானம் ஐநா பணியின் ஒரு பகுதியாக இயங்கிய கனடாவின் கண்காணிப்பு விமானம் ஒன்றின் 16 அடிக்குள் வந்ததாக, பிளேயர் கூறினார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...