tamilni 270 scaled
உலகம்செய்திகள்

இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்குள் புகுந்துள்ள சீன இராணுவம்

Share

இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்குள் புகுந்துள்ள சீன இராணுவம்

பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் குழு ஒன்று அண்மையில் மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்துக்குச் சென்றுள்ளதாக பீய்ஜிங் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பீய்ஜிங் தெற்காசியாவில் அதன் மூலோபாய போட்டியாளரான இந்தியாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான உந்துதலில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க முயன்று வருகிறது.

கடந்த வாரம், மாலைதீவுகள் சீனாவுடன் ஒரு “இராணுவ உதவி” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதேவேளை, மார்ச் 4 முதல் 13 ஆகிய திகதிகள் வரை இலங்கை சீனா மற்றும் நேபாளத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தின்போது இராணுவத் தூதுக்குழு மாலைதீவில் சீன சார்பு அதிபர் மொஹமட் முய்சுவை சந்தித்ததை பீய்ஜிங் நேற்றையதினம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த மூன்று நாடுகளிலும், “இராணுவ உறவுகள் மற்றும் பொதுவான அக்கறையின் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை சீனக்குழுவினர் பரிமாறிக் கொண்டனர்” என்று சீன இராணுவம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பீய்ஜிங் நேபாளத்துடனும் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...