6 19 scaled
உலகம்செய்திகள்

சீனாவின் புதிய எல்லை வரைபடம்: முக்கிய நாடுகள் எதிர்ப்பு

Share

சீனாவின் புதிய எல்லை வரைபடம்: முக்கிய நாடுகள் எதிர்ப்பு

சீனாவின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியாவை தொடர்ந்து பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சீன அரசாங்கம் 2023ம் ஆண்டுக்கான புதிய நிலையான சீன எல்லை வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் ஒற்றை அங்கமாக காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வரைபடத்தில் தைவான், முழு தென் சீனக் கடல் பகுதிகள், பிலிப்பைன்ஸ் கடல் பகுதி ஆகியவற்றை தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவின் 2023ம் ஆண்டுக்கான புதிய எல்லை வரைபடத்துக்கு இந்தியாவை தொடர்ந்து பல முக்கிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அந்த வகையில் சீனாவின் 2023ம் ஆண்டுக்கான புதிய எல்லை வரைபடத்துக்கு பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...