tamilni 280 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் எச்சரிக்கை

Share

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் எச்சரிக்கை

எப்போதும் இல்லாதவாறு இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகன் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினையும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் சீனா மேற்கொண்ட நில ஆக்கிரமிப்புக்களினை எதிர்த்து, இந்தியாவின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து சீனாவுடன் மோதல்கள் இடம்பெற்றது இந்த மோதலில் 19 இராணுவ வீரர்கள் வரை வீரமரணம் அடைந்தனர்.

இந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் 20 முறை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன.

அண்மையில் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது எல்லைகளில் இருக்கும் பாதுகாப்பு படைகளை கணிசமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு இரு தரப்பும் வந்தன.அதேபோல் எல்லைகளில் இருந்த படைகளை கணிசமாக விலக்கியும் இருந்தன.

இவ்வாறிருக்கையில் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றினை அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சீனா குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 500 அணு ஆயுதங்களை செயல்படும் நிலையில் சீனா வைத்துள்ளது என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் சீனாவிடமுள்ள அணு குண்டுகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2022 ஆம் ஆண்டில் புதிதாக 3 ஏவுகணைத் தளங்களை சீனா கட்டி முடித்துள்ளது என்றும் இந்த ஏவுகணை தளங்களில் 300 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஏவுகணைகளுக்கு 5,500 கி.மீ. தொலைவுக்கு சீனா இலக்குகளையும் நிர்ணயித்துள்ளது, இது அமெரிக்காவுக்கும் பேராபத்தாக அமையும்.

மேலும் மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, நைஜீரியா, நமீபியா, மொசாம்பிக், பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் இராணுவ தளங்களை அமைக்கவும் சீனா மும்முரம் காட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல் கடந்த ஆண்டு (2022) 340 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருந்த சீனா தற்போது அந்த எண்ணிக்கையினை 370 இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, 2030 ஆம் ஆண்டுக்குள் இதனை 435 ஆக அதிகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தாய்வானை முற்றாக ஆக்கிரமித்து கைப்பற்றும் நோக்கத்தில் சீனாவின் முப்படைகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் இந்தியாவின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு, பான்காங் ஏரி பகுதிகளிலும் பூட்டானின் டோக்லாம் பீடபூமி பகுதியிலும் சீனா தனது இராணுவ நடவடிக்கையினை அதி தீவிரப்படுத்தியுள்ளதாகவும், புதிதாக போர் விமான தளங்கள், இராணுவ ஹெலிகாப்டர் தளங்கள்,இராணுவ குடியிருப்புகளை சீனா கட்டமைத்துள்ளதாகவும் பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஏற்கனவே இராணுவ மோதல் நிகழ்ந்து பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையினை நடத்திக் கொண்டே இத்தகைய இராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியிருப்பது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக டில்லி ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...