24 65b3a42930c6a
உலகம்செய்திகள்

அழகிகளை நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்: தன் குடிமக்களை எச்சரித்துள்ள நாடு

Share

அழகிகளை நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்: தன் குடிமக்களை எச்சரித்துள்ள நாடு

அழகிகளை நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள், அவர்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சீனா தன் குடிமக்களை எச்சரித்துள்ளது.

அழகான பெண்ணிடம் சிக்கிய சீனர்
சீன நாட்டவர் ஒருவர், இரவு விடுதி ஒன்றில் ஒரு அழகான பெண்ணை சந்தித்து அவர் அழகில் மயங்கியதாகவும், பின்னர் அவர் வெளிநாட்டு உளவாளிகளால் பிளாக் மெயில் செய்யப்பட்டதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் லீ சி ( Li Si) என்பவர், இரவு விடுதி ஒன்றிற்குச் சென்றிருந்தாராம், அங்கே, நீங்கள் எத்தனை அழகிய பெண்களை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டதாம்.

அதை நம்பி லீ சி அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க, திடீரென சீருடை அணிந்த சில வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைந்து லீ சியை நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்தார்களாம்.

பின்னர் அந்த புகைப்படங்களைக் காட்டி அவரை அந்தக் கூட்டம் பிளாக் மெயில் செய்ய, அவர் பயந்து தனது லாப் டாப்பை அவர்களிடம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம்.

இவ்வாறாக, 10 ஆண்டுகளாக ரகசிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த அந்த கணினி, வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றிடம் சிக்கிக்கொண்டது என்கிறது சீன பாதுகாப்பு அமைச்சகம்.

’அழகிகளைத் தேடி அலைகிறீர்களா, ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்’ என்ற வாசகம், அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இடுகையில் தலைப்புச் செய்தியாக கொடுக்கப்பட்டுள்ளதாம்

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...