8 28
உலகம்செய்திகள்

இந்தியா குறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சீனா

Share

இந்தியா குறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சீனா

இந்தியா தாய்வானுடன் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது டெல்லி, சென்னையை தொடர்ந்து மும்பையிலும் தாய்வான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ள நிலையிலேயே குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது..

எனினும் சீனா, தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி தாய்வான் என உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தாய்வான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தாய்வானுடன் எந்தவொரு அதிகாரபூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும்.

பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தாய்வானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவது கூடாது.

சீன – இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...