உலகம்செய்திகள்

இந்தியா குறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சீனா

Share
8 28
Share

இந்தியா குறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சீனா

இந்தியா தாய்வானுடன் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது டெல்லி, சென்னையை தொடர்ந்து மும்பையிலும் தாய்வான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ள நிலையிலேயே குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது..

எனினும் சீனா, தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி தாய்வான் என உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தாய்வான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தாய்வானுடன் எந்தவொரு அதிகாரபூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும்.

பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தாய்வானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவது கூடாது.

சீன – இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...