tamilni 298 scaled
உலகம்செய்திகள்

100% மனிதர்களை கொல்லும் வைரசை ஆய்வு செய்யும் சீனா – உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

100% மனிதர்களை கொல்லும் திறனுடைய கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரை சீனா பறித்தது.

இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனாவின் ஜே.என். வகை வைரசின் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 100% மனிதர்களை கொல்லும் திறனுடைய கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா போன்ற வைரசை எலிகளுக்கு கொடுத்து, அதை வைத்து சீன ராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற வைத்தியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் 4 எலிகளை தேர்வு செய்து, வைரசையும் உட்செலுத்தி என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி கண்காணித்து வருகின்றனர்.

இதே பரிசோதனையானது வேறு 4 எலிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வைரஸ் உட்செலுத்தப்படவில்லை.

வைரசால் தொற்று ஏற்பட்ட அனைத்து எலிகளும் 7 முதல் 8 நாட்களில் உயிரிழந்து விட்டன. 5 நாட்களில் உடல் எடையும் குறைந்துள்ளது. அவற்றின் கண்களும் வெளிறி காணப்பட்டுள்ளது.

இது மனிதர்களிடையே பரவினால் கொடிய தாக்கங்களை ஏற்படுத்த கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் ஆய்வகத்தில் வைத்து தான் கொரோனா தொற்றுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அறிக்கையை உலக சுகாதார அமைப்பு சமர்ப்பிக்கும்படி கூறியிருந்தது.

ஆனால் இதுவரையில் சீன அரசாங்கம் அதை செய்யவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வானது உலக மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

நிலவும் குளிர்காலத்தினாலும் வருகிற இளவேனில் காலத்திலும் பல்வேறு சுவாச நோய்கள் பரவும். இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படிருந்தது.

இந்நிலையில் இந்த ஆய்வையும் மேற்கொண்டு வருவதால் தொற்று பரவாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...