24 6664cd433cfbc
உலகம்செய்திகள்

வரலாற்றில் தடம்பதிக்கும் சீனாவின் கனவுத்திட்டம்: நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகள்

Share

வரலாற்றில் தடம்பதிக்கும் சீனாவின் கனவுத்திட்டம்: நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகள்

நிலவின் தென் துருவத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சீனாவின் லாங் மார்ச்-5 விண்கலமானது அங்கிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் கனவு திட்டம் என கூறப்படும் இந்த ஆராச்சியானது, சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

சர்வதேச நாடுகள் இதுவரை தடம் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது.

இதனையடுத்து நிலவின் தென் துருவத்திற்கு ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின.

ஆனால், இரு நடவடிக்கைகளும் தோல்வியடைந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக சீனா மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.

அதாவது, நிலவின் மற்றொரு பகுதியிலிருந்த மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் காரணமாகவே லாங் மார்ச்-5 விண்கலத்தை சீனா நிலவில் செலுத்தியுள்ளது.

இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு என்கிற பெருமையை சீனா பெறும்.

இதற்கான விண்கலமானது தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து கடந்த மாதம் ஏவப்பட்டது.

இதில் Chang’e-6 எனும் ஆய்வுக் கருவி இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கருவி நிலவில் தரையிறங்கியுள்ளது.

இது நிலவின் மறு பக்கத்திலிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் என சீனா கூறியுள்ளது.

இந்த திட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...