CORONA
உலகம்செய்திகள்

கொரோனாவின் பிடியில் குழந்தைகள் -அச்சத்தில் தென்னாப்ரிக்கா

Share

தென்னாப்ரிக்காவில் கொரோனா குழந்தைகளை அதிகமாக தாக்கி வருகிறது.இதனால் தென்னாப்ரிக்க மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தென்னாப்ரிக்காவில் ஒமிக்ரொன் எனப்படும் பல மடங்கு உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அங்கு 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும், நாள்தோறும் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை, தென்னாப்ரிக்காவில் புதிதாக 16,055 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 25 பேர்சாவடைந்துள்ளனர்.

கடந்த கால கொரோனா பேரிடர்களின்போது, பொதுவாகவே குழந்தைகளுக்கு அதிகமாககொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

அதுபோலவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவும் அதிகரிக்கவில்லை.

ஆனால், தற்போதைய கொரோனா அலையில், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கும், 15 முதல் 19 வயதுடைய இளைஞர்களுக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, நான்காவது அலை உருவாகுமோ என்ற நிலையில், அனைத்து தரப்பு வயதினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு என்று தேசிய தொற்றுநோய் மையத்தின் வைத்தியர் வாஸிலா ஜஸ்ஸத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோரில் மிக அதிகமாக இருப்பது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளே, அடுத்தபடியாகத்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதுவரை நாம் பார்த்த காட்சிகளுக்கு நேரெதிரான நிலை தற்போது உருவாகியுள்ளது. இதுபோன்ற நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த அலையின் ஆரம்பத்தில் தற்போது இருக்கிறோம். தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் படுக்கைகளை அதிகரிப்பது மற்றும் ஊழியர்களை அதிகரிப்பதுதான் அவசியம் என்று தெரிகிறது என்கிறார்கள்.

அத்தோடு ஒருபக்கம் ஒமிக்ரொனும் உலகை முடக்கிய வண்ணம் உள்ளது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...