CORONA
உலகம்செய்திகள்

கொரோனாவின் பிடியில் குழந்தைகள் -அச்சத்தில் தென்னாப்ரிக்கா

Share

தென்னாப்ரிக்காவில் கொரோனா குழந்தைகளை அதிகமாக தாக்கி வருகிறது.இதனால் தென்னாப்ரிக்க மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தென்னாப்ரிக்காவில் ஒமிக்ரொன் எனப்படும் பல மடங்கு உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அங்கு 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும், நாள்தோறும் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை, தென்னாப்ரிக்காவில் புதிதாக 16,055 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 25 பேர்சாவடைந்துள்ளனர்.

கடந்த கால கொரோனா பேரிடர்களின்போது, பொதுவாகவே குழந்தைகளுக்கு அதிகமாககொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

அதுபோலவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவும் அதிகரிக்கவில்லை.

ஆனால், தற்போதைய கொரோனா அலையில், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கும், 15 முதல் 19 வயதுடைய இளைஞர்களுக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, நான்காவது அலை உருவாகுமோ என்ற நிலையில், அனைத்து தரப்பு வயதினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு என்று தேசிய தொற்றுநோய் மையத்தின் வைத்தியர் வாஸிலா ஜஸ்ஸத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோரில் மிக அதிகமாக இருப்பது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளே, அடுத்தபடியாகத்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதுவரை நாம் பார்த்த காட்சிகளுக்கு நேரெதிரான நிலை தற்போது உருவாகியுள்ளது. இதுபோன்ற நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த அலையின் ஆரம்பத்தில் தற்போது இருக்கிறோம். தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் படுக்கைகளை அதிகரிப்பது மற்றும் ஊழியர்களை அதிகரிப்பதுதான் அவசியம் என்று தெரிகிறது என்கிறார்கள்.

அத்தோடு ஒருபக்கம் ஒமிக்ரொனும் உலகை முடக்கிய வண்ணம் உள்ளது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...