8 27
உலகம்செய்திகள்

லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்

Share

லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்

லெபனானில் போர்நிறுத்தம் சாத்தியப்பட்டாலும் காசாவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது மிகவும் கடினம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது காசாவில் போர் நிறுத்தத்தை உருவாக்க வழிவகுக்கும் என அவர் கூறியிருந்தார்.

எனினும், சின்வாரின் மரணம் முடிவல்ல என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதன்மை இடத்தை வகித்த சின்வார், கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேலில் நடாத்தப்பட்ட தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் ஆவார்.

சின்வார் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஹமாஸ் அமைப்பினர், இது தம்மை மேலும் பலப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காவாவிற்குள் இஸ்ரேல் ஊடுருவிய பின்னர், 42,500 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...