8 27
உலகம்செய்திகள்

லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்

Share

லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்

லெபனானில் போர்நிறுத்தம் சாத்தியப்பட்டாலும் காசாவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது மிகவும் கடினம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது காசாவில் போர் நிறுத்தத்தை உருவாக்க வழிவகுக்கும் என அவர் கூறியிருந்தார்.

எனினும், சின்வாரின் மரணம் முடிவல்ல என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதன்மை இடத்தை வகித்த சின்வார், கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேலில் நடாத்தப்பட்ட தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் ஆவார்.

சின்வார் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஹமாஸ் அமைப்பினர், இது தம்மை மேலும் பலப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காவாவிற்குள் இஸ்ரேல் ஊடுருவிய பின்னர், 42,500 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...