23 6513d46e076d3 md
உலகம்செய்திகள்

கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் உளவாளியா? வெளியான பரபரப்பு தகவல்கள்

Share

கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் உளவாளியா? வெளியான பரபரப்பு தகவல்கள்

கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயத்தால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லப்பட்ட நபர் குறித்து அவரது மகன் கூறியுள்ள விடயங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் மகன் தெரிவித்துள்ள சில தகவல்களால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் மகனான பல்ராஜ் சிங் நிஜ்ஜர் (Balraj Singh Nijjar, 21), தன் தந்தை, அடிக்கடி கனேடிய உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்துவந்ததாக தெரிவித்துள்ளார்.

தன் தந்தை நிஜ்ஜர், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்துவந்ததாக பல்ராஜ் சிங் கூறியுள்ளதுடன், ஜூன் 18ஆம் திகதி அவர் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, அவர்களை சந்தித்ததாகவும், அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகும் அவர்களை சந்திக்கும் திட்டம் அவருக்கு இருந்ததாகவும் வான்கூவர் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், Economic Times பத்திரிகை வெளியிட்டுள்ளசெய்தி ஒன்றில், நிஜ்ஜர் கனேடிய உளவுத்துறை அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துவந்துள்ளதை வைத்து பார்க்கும்போது, அவர் கனேடிய உளவுத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக இருக்கலாம் என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...