tamilni 516 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் கனேடியர் பலி! என் இதயத்தை உடைக்கிறது..மொத்த கனேடிய பலி எண்ணிக்கையை கூறிய ட்ரூடோ

Share

ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர்ளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்ததுடன், தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் காஸாவில் 21,500 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது தென் ஆப்பிரிக்கா இனப்படுகொலை குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்குப்பதிவு செய்தது.

அதே போல் பல நாடுகள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், கனடா தனது ஆதரவினை கூறி வருகிறது.

இந்த நிலையில், 8 கனேடியர்கள் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அக்டோபர் 7 அன்று ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின்போது கனேடிய குடிமக்கள் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஜூடி வெய்ன்ஸ்டீனும் ஒருவர் என்பது இப்போது நமக்கு தெரியும்.

இந்த செய்தி என் இதயத்தை உடைக்கிறது. கொல்லப்பட்ட 8 கனேடியர்களின் அன்புக்குரியவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்களின் நினைவு வரமாக அமையட்டும்’ என கூறியுள்ளார்.

அதேபோல் அவரது மற்றொரு பதிவில், ‘வீழ்ந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கையில், ஹமாஸை மீண்டும் ஒருமுறை கண்டிக்கிறோம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...