2 15 scaled
உலகம்செய்திகள்

குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை

Share

குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை

கனேடிய குடியுரிமை பெற்ற ஒருவரின் மனைவி இந்தியாவில் பிரசவித்ததால், தன் மகளை கனடாவுக்கு அழைத்து வருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லிங்கன் (Lincoln Sekkappan), ஒரு கனேடிய குடிமகன். அவரது மனைவி கமலம் (Kamalam Elangovan) கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார்.

ஆனால், இந்தியாவுக்கு வந்திருந்தபோது, தன் மகளான ஆவிரா (Avira Mutho)வை பிரசவித்துள்ளார் கமலம். தம்பதியர் தங்கள் மகளுக்கு குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தபோது, சில ஆவணங்களை இணைக்கத் தவறியுள்ளார்கள்.

முதல் விண்ணப்பமே பிரச்சினைக்குரியதாகிவிட, இரண்டாவது விண்ணப்பத்தில் தேவையான ஆவணங்களை இணைத்தும், சில ஆவணங்கள் இல்லை என்றே புலம்பெயர்தல் அலுவலகம் கூறியுள்ளது. ஆக, இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

இதை ஒரு எச்சரிக்கை செய்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம். காரணம், முதல் விண்ணப்பத்தில் தவறு வராதிருந்திருக்குமானால், இவ்வளவு கால தாமதத்திற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

இது குறித்து விளக்கிய புலம்பெயர்தல் சட்டத்தரணியான Chris Veeman, இந்த தம்பதியரின் குழந்தை விடயத்தில் பல பிரச்சினைகள் உள்ளதாக தெரிவிக்கிறார்.

முதலாவது, தம்பதியர் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும் என்பது குறித்த விவரங்களை சரியாக பின்பற்றவில்லை. ஆகவே, முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது விண்ணப்பம் குறித்து புலம்பெயர்தல் துறையிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

ஆக, புலம்பெயர்தல் எளிதான ஒரு செயல்முறை அல்ல என்கிறார் Chris. மனித தவறுகளும் தொழில்நுட்பப் பிரச்சினைகளும் பல குழப்பங்களை உருவாக்கிவிடுகின்றன என்கிறார் அவர். இந்த தம்பதியரைப் பொருத்தவரை, குழந்தையின் விண்ணப்பங்களை இறுதி செய்ய, ஒருவேளை அதிகாரப்பூர்வ சட்டத்தரணி ஒருவரின் உதவி அவர்களுக்குத் தேவைப்படலாம் என்கிறார் அவர்.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb332553beb
செய்திகள்இலங்கை

மிதிகம லசா கொலைச் சூத்திரதாரி: இராணுவத்தில் தப்பிச் சென்ற சிப்பாய்க்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் – விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது மிதிகம லசாவின் கொலை தொடர்பாக நடந்து...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...