tamilni 517 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் உயிரிழப்பு

Share

கடந்த 5 ஆண்டுகளில் கனடாவில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ட்ரூடோ அரசு கவலை தெரிவித்துள்ளது.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சில காலமாக நல்லுறவு இல்லை. குறிப்பாக ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நிலவும் மோதல் நிலைமையை மோசமாக்கியுள்ளது. இருந்தும் இந்திய மாணவர்களின் கனடா செல்லும் ஆர்வம் குறையவில்லை.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவை இந்திய மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான நாடுகளில் உள்ளன, ஆனால் கனடாவில் இந்திய மாணவர்களின் இறப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.

2018-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக இந்திய மாணவர்களின் இறப்புகளை கனடா பதிவு செய்துள்ளது.

கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசும் இது குறித்து கவலை தெரிவித்ததுடன், சர்வதேச மாணவர்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

2024-25 கல்வியாண்டு தொடங்கும் முன் இந்த புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த கனடா அரசு இலக்கு வைத்துள்ளது.

அரசாங்கத்தின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (Immigration, Refugees and Citizenship Canada, IRCC), மாணவர்களின் கவலைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை உருவாக்க மாகாணங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.

தி பிரிண்ட் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2018 முதல், வெளிநாட்டில் 403 இந்திய மாணவர்களின் இறப்புகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிவு செய்துள்ளது.

இதில் 91 இந்திய மாணவர்கள் கனடாவில் உயிரிழந்துள்ளனர்.

இயற்கையான காரணங்கள், விபத்துக்கள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.

கனடாவைத் தொடர்ந்து பிரித்தானியாவில் 48 மாணவர்களும், ரஷ்யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், அவுஸ்திரேலியாவில் 35 மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்தார்.

இந்திய மாணவர்களுக்கான இரண்டாவது தேர்வாக கனடா உள்ளது. பிப்ரவரி 2023-ல் வெளியுறவு அமைச்சகம் மாநிலங்களவையில் வழங்கிய தரவுகளின்படி, 2018 மற்றும் 2022க்கு இடையில் 5,67,607 இந்தியர்கள் கனடாவில் படிக்க வெளிநாடு சென்றுள்ளனர்.

2018 மற்றும் 2022க்கு இடையில், அதிகபட்சமாக 6,21,336 இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அடுத்தபடியாக 3,17,119 மாணவர்கள் பிரித்தானியாவுக்கு படிக்கச் சென்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...