tamilni Recovered 2 scaled
உலகம்செய்திகள்

கனடா- இந்தியா மோதல்: உற்றுநோக்கும் உலக நாடுகள்

Share

கனடா- இந்தியா மோதல்: உற்றுநோக்கும் உலக நாடுகள்

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல், மேற்கத்திய நாடுகளில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதல், பிற சர்வதேச உறவுகளை பாதித்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், அலுவலர்களும் கடும் முயற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா வளர்ந்துவரும் ஒரு வல்லரசு நாடாகக் கருதப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இளைஞர்கள் எண்ணிக்கையோ குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதி பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

அதாவது, அடுத்த பல பத்தாண்டுகளுக்கும், இந்தியாவில் பணி செய்யும் வயதுடையோர் போதுமானவர்கள் இருப்பார்கள். உலக அரங்கில் இது ஒரு பலமாக கருதப்படுகிறது.

அடுத்தபடியாக, சீனாவிடமிருந்து மேற்கத்திய நாடுகளை பாதுக்காக்கும் ஒரு தடுப்புச்சுவராகவும் இந்தியா மேற்கத்திய நாடுகளால் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த G20 உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை, ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு அதை கண்டிக்காத நிலையிலும், உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகள், அந்த அறிக்கையை ஒப்புக்கொண்டபோது, இந்தியாவுக்கு மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் முக்கியத்துவம் அதில் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்த அறிக்கையின் மீதான சர்ச்சையைத் தவிர்ப்பதன் மூலம் இந்தியாவுடனான தங்கள் உறவைப் பாதுகாப்பதை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இது உக்ரைன் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

கனடா இந்திய பிரச்சினையில் மேற்கத்திய நாடுகள் தலையிட அஞ்சுவதற்கு மற்றொரு காரணம், கனடா ஆதரவு நாடுகள், இந்தியா ஆதரவு நாடுகள் என உலக நாடுகள் பிரிந்துவிடக்கூடாது என்ற அச்சமும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு உள்ளது.

ஏற்கனவே, பிரேசில், இந்தோனேசியா, சீனாவுடன், இந்தியா தெற்கு உலகம் (The Global South) என அழைக்கப்படும் நிலையில், கனடா இந்திய பிரச்சினையால், வடக்கு தெற்கு என்னும் சர்ச்சை உருவாகிவிடக்கூடாது என அவர்கள் கருதுகிறார்கள்.

ஆக, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அது தொடர்பாக துவக்கப்பட்டுள்ள விசாரணையை உலக நாடுகள் உற்றுக் கவனித்துவருகின்றன.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...